News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, May 20, 2025

பண்ருட்டி சுற்றுவட்டார ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மாநாடு சம்பந்தமாக விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது

 ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ,

 கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள செமகோட்டை ,
அங்கு செட்டிபாளையம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மாநாடு சம்பந்தமாக விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது.

மேலும் மாநாட்டுக்கு மக்களை அதிகமான அளவில் அழைப்பதற்கு ஏதுவாக ஜும்மாவின் தினத்தன்று மக்களுக்கு நோட்டீஸ்  வழங்கி அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சேமகோட்டை பகுதிகளிலும் புதுப்பேட்டை பகுதியிலும் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மாநாட்டு  விபரங்களை எடுத்துக் கூறி மாநாட்டிற்கு  வருமாறு அழைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது

அல்ஹம்துலில்லாஹ்



Monday, May 19, 2025

ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை  சார்பாக மேற்பட்டாம்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 25 5 2025 அன்று நடக்கவிருக்கும் சமூக விழிப்புணர்வு மாநாட்டில்  கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும்   விதமாக இன்று பண்ருட்டி  அவுலியா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மாநாட்டின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சகோதரர் இல்லியாஸ் Misc அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றியும் அதிகமான மக்கள்  கொள்ளும்படி   மக்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது.

மாநாட்டு சம்பந்தமான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


Monday, May 12, 2025

செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் கடந்த ஞாயிறு (11 -05-2025) அன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு நடைபெற்றது.
 சகோதரர் கிளைத்தலைவர் முஹம்மத் சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் சகோதரர் உபைதுல்லா அவர்களும் சகோதரர் ஜபர்தீன் ன் அவர்களும் மற்றும் கிளை நிர்வாகிகளும்  கலந்து கொண்டார்கள் .







இதில் சகோதரர் சலீம் எம் ஐ சி அவர்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரர் இலியாஸ் எம் ஐ சி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் ,

பிறகு சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

Monday, March 31, 2025

பெருநாள் தொழுகைக்கு பிறகு சரியாக பதில் அளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் இன்று நடைபெற்ற பெருநாள் தொழுகைக்கு பிறகு

கடந்த ரமலானிலே நடைபெற்ற சிறப்பு பயான்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


அல்ஹம்துலில்லாஹ்









கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை Eid ul fitr தொழுகை

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு 

31/03/2025 8:30 A.M
கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளையில் இன்று காலை 7 மணிக்கு Eid ul fitr  தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

 ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது மார்க்கக் கடமையை செய்தனர் மற்றும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்..