News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, March 20, 2018

தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!



தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!
பாபர் மசூதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவரும் நிலையில் பாபர் மசூதி இடத்தில் ராமர் ஆலயம் எழுப்புவோம் என்ற கோரிக்கையுடன் காவி அமைப்புகள் ரத யாத்திரை நடத்துகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் இந்த ஊர்வலம் சட்ட விரோதமானதாகும்.
சட்டவிரோதமான ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து மத நல்லிணக்கத்தைச் சீரழிக்க துணை நிற்கும் தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்தால் ஐந்து பேருக்கு மேல் அறவே கூடக்கூடாது. ஆனால் காவிகளுக்கு எதிராக கூடுபவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்திவிட்டு, அவர்களை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்துவிட்டு, காவிகள் மட்டும் ரத ஊர்வலம் வரலாம் என்றால் இதைவிட கோமாளித்தனம் ஏதுமிருக்க முடியாது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஊர்வலமும் அதில் அடங்கும்.
தமிழக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத மதவெறி நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
Image may contain: one or more people and text
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்


Tuesday, March 13, 2018

Tuesday, March 6, 2018

ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

அயோத்தியா விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்காவிட்டால் இந்தியா சிரியாவாக மாறும்:
-ரவிசங்கர் பாபாவின் விஷமப் பேச்சிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் என்ற போர்வையில் பா.ஜ.க.வின் கள்ள ஏஜெண்டாக செயல்படுபவர் காவிச் சாமியார் ரவிசங்கர் பாபா.
பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் முஸ்லிம்களை காவிகளின் சூழ்ச்சி வலையில் விழவைப்பதற்காக பா.ஜ.க. நியமித்த கள்ள ஏஜெண்ட்தான் இந்த ரவிசங்கர் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைச் சந்தித்து இவர் நாடகங்களை அரங்கேற்றினார்.
இவரின் நஞ்சு உள்ளத்தை நன்கறிந்த முஸ்லிம்கள், இவரின் சூழ்ச்சிக்குப் பலியாகவில்லை.
இதனையடுத்து தற்போது விஷத்தை உமிழ தொடங்கியுள்ளார்.
Image may contain: 1 person, smiling, text

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”ராமர் கோவில் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும். நல்லெண்ண நோக்கில் அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட வேண்டும்” என்று காவி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாபர் பள்ளிவாசலில் நள்ளிரவில் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்து, அதை பிரச்சினையாக கிளப்பி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை ரத்த யாத்திரை நடத்தி இடித்துத் தள்ளியதே காவிகள்தான் என்பது உலகை விட்டு நீங்காத வரலாறு.
பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காவிட்டால் சிரியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இந்தியாவிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.
உலக ஆசைகளுக்கு அடிபணிந்து, நாட்டைக் காட்டிக் கொடுத்த காவிகளைப் போல மிரட்டியவுடன் பணிந்துபோக முஸ்லிம்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.
படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் முஸ்லிம்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
அதனால்தான் சிரியாவில் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று மிரட்டும் மனித மிருகங்களைக் கண்டு சிரியா முஸ்லிம்கள் அஞ்சவில்லை. இஸ்லாத்தை விட்டு ஓடிவிடவில்லை.
அதேபோல்தான் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருக்கிறது. காவல்துறை நம் கையில் இருக்கிறது. ராணுவம் இருக்கிறது. முஸ்லிம்களை மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று காவிகள் நினைப்பார்களேயானால் அவர்களைக் கண்டு கடுகளவு கூட முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள்.
முஸ்லிம்களின் மத உணர்வோடு தொடர்புடைய பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் ரவிசங்கர் காவி விசுவாசத்தைக் காட்டாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
இவரின் விஷமப் பேச்சினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பதுடன் இனிமேலும் இவர் இதேபோன்று பேசுவாரேயானால் தக்க முறையில் அவருக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
நாட்டில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி கலவர விதை தூவும் பயங்கரவாதியான ரவி சங்கர் பாபாவை தேசிய பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Monday, March 5, 2018

#முகநூலில்_அக்கவுண்ட்_வைத்திருக்கும்_தவ்ஹீத்_ஜமாஅத்தின்_உறுப்பினர்கள்_கவனத்திற்கு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் TNTJ என்பதையோ, TNTJ கொடியையோ போட்டு முகநூலில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜமாஅத்தின் கொள்கையையும், நிலைப்பாட்டையும் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத சிலர் TNTJ என்று தங்கள் பெயருடன் சேர்த்தும், அல்லது TNTJ கொடியை இணைத்தும் ஜமாஅத்துக்கு எதிரான, ஜமாஅத்துக்கு சங்கடம் ஏற்படுத்தும் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் தமது பெயருடன் TNTJ அல்லது TNTJ கொடி போடுவதாக இருந்தால் தங்கள் பெயருடன் உறுப்பினர் எண்ணையும் சேர்த்து போடவும்.
ஏற்கனவே முகநூலில் இருப்பவர்களும் புதிதாக நுழைபவர்களும் இதைக் கடைப்பிடிக்கவும். இதன் மூலம் ஜமாஅத் பெயரில் குழப்பவாதிகள் ஊடுறுவுவதை தடுக்க முடியும்.
உறுப்பினர் எண்ணைக் குறிப்பிடாமல் பதிவிடுவோர் நம் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
இனி வரக்கூடிய காலங்களில் இதை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Tuesday, January 23, 2018

அவசர அறிக்கை



அவசர அறிக்கை
அன்புள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு...
தமிழக அரசு வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதைக் கண்டித்து கிளை மாவட்டங்களுக்கு சக்தி இருந்தால் இந்த போஸ்டரை அடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
போஸ்டர் வாசகம்
No automatic alt text available.
தமிழக அரசே
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
பஸ் கட்டண உயர்வை
உடனே திரும்பப் பெறு
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்

https://www.facebook.com/ThouheedJamath/photos/a.340617859290568.86761.338454826173538/1814325125253160/?type=3&theater

இந்த வார உணர்வு (26.01.18 - 01.02.18)

இந்த வார  உணர்வு இதழில்
(26.01.18 - 01.02.18)


No automatic alt text available.





Tuesday, January 16, 2018

இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை

இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை:
- ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரைக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கு, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜ் மானியம் ரத்துசெய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடிக்கின்றது என்பதே உண்மையாகும்.
சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள்.
இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்கள்.
விமானத்திற்கான அதிகபட்சக் கட்டணம் : 25,000
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000
ஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்கள்தான் ஆகிறது.
அதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய்கள். இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.
இதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.
ஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய்கள் மிச்சமாகும்.
அப்படியானால் மானியம் என்ற பிரச்சனை எப்படி வருகின்றது?
ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில் தான் பயணிக்க வேண்டும்.
ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.
மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடம் இருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும். மேலும் ஹஜ் பயணிகளில் பாதிப் பேர் ஏர் இந்தியா மூலம் பயணம் செய்தால் மீதிப் பேர் சவூதி ஏர் லைன்ஸ் மூலம் பயணிக்கிறார்கள். பாதி மானியத்தை சவூதி ஏர் லைன்ஸுக்கு வழங்க வேண்டுமல்லவா? அப்படி வழங்குவதில்லை. செய்யாத பயணத்துக்கான பொய்யான அந்த மானியத்தையும் ஏர் இந்தியாவே அதாவது இந்திய அரசே எடுத்துக் கொள்கிறது.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படி கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.
அனைத்து மக்களுக்குமான வரிப்பணத்தில் இருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை. எனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.
ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.
டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.
போலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதோடு ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக மத்திய அரசு சுரண்டுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

Source : https://www.facebook.com/ThouheedJamath/posts/1806226829396323