தமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்!
பாபர் மசூதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவரும் நிலையில் பாபர் மசூதி இடத்தில் ராமர் ஆலயம் எழுப்புவோம் என்ற கோரிக்கையுடன் காவி அமைப்புகள் ரத யாத்திரை நடத்துகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்படும் இந்த ஊர்வலம் சட்ட விரோதமானதாகும்.
சட்டவிரோதமான ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து மத நல்லிணக்கத்தைச் சீரழிக்க துணை நிற்கும் தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பித்தால் ஐந்து பேருக்கு மேல் அறவே கூடக்கூடாது. ஆனால் காவிகளுக்கு எதிராக கூடுபவர்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவை அமல்படுத்திவிட்டு, அவர்களை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்துவிட்டு, காவிகள் மட்டும் ரத ஊர்வலம் வரலாம் என்றால் இதைவிட கோமாளித்தனம் ஏதுமிருக்க முடியாது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஊர்வலமும் அதில் அடங்கும்.
தமிழக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோத மதவெறி நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
No comments:
Post a Comment