News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, October 24, 2017

உறுப்பினர் அட்டை பற்றிய அறிவிப்பு , தலைமை சுற்றறிக்கை எண் :143/2017 . தேதி :24.10.2017

தலைமை சுற்றறிக்கை எண் :143/2017 .  தேதி :24.10.2017

கண்ணியத்திற்குரிய மாவட்டத் தலைவர்  &  நிர்வாகிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

உறுப்பினர் அட்டை பற்றிய அறிவிப்பு:

அஸ்ஸலாமு அலைக்கும்
உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டையில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளோம்.

இன்று அரசு நிறுவனங்களும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தமது அடையாள அட்டைகளை QR கோடு உடன் .

அதை ஸ்கேன் செய்வதன் மூலம் உறுப்பினர் பற்றிய விபரங்களை கணிணியில் பார்த்து உறுதி செய்ய முடியும். இதில் இன்னும் பல நன்மைகள் உள்ளன.

நமது உறுப்பினர் அட்டையும் இனிமேல் QR கோடு உடன் இப்போது உள்ளதை விட சிறந்த தரத்துடனும் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறையும் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு ஜனவரியிலும், இன்னொருவருக்கு பிப்ரவரியிலும் இப்படி பல்வேறு மாதங்களில் உறுப்பினர் அட்டை காலாவதியாகும் நிலை உள்ளது.

தமது உறுப்பினர் அட்டை எப்போது முடிகிறது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் வைக்க முடியாத நிலை உள்ளது.

இனிமேல் அனைத்து உறுப்பினர் அட்டைகளும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.

உறுப்பினராக விண்ணப்பம் செய்பவர் ஜனவரி முதல் ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பித்தால் அந்த ஆண்டு டிசம்பர் 31 உடன் அட்டை காலாவதியாகும்.

ஜூன் மாதத்துக்குப் பின் விண்ணப்பம் செய்தால் அவர்களின் அட்டை அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியாகும்.

அனைவருக்கும் ஒரே நாளில் உறுப்பினர் அட்டை முடிவடைவதாக இருந்தால்  அவர்கள் அனைவரும் அல்லது பெருவாரியான மக்கள் ஒரே நாளில் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

 பல வகையில் ஜமாஅத்திற்கும் இந்நடைமுறை நன்மையாக அமையும் என்று கருதி இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.

தற்போது உறுப்பினராக உள்ள அனைவரின் கார்டுகளும் டிசம்பருடன் காலாவதியாகும் என்பதால் பழைய உறுப்பினர்களும் உடனே புதிப்பித்து  கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய கார்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பழைய அட்டையை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்

Tuesday, September 26, 2017

திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்து முக்கிய அறிவிப்பு!




மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்
மாநில மாநாடு குறித்து பொதுக்குழுவில்
மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு!



Tuesday, September 19, 2017

ரோஹிங்கிய முஸ்லீம் இன படுகொலை எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹமத்துல்லாஹி  வ பரக்காத்தஹு ,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் (வடக்கு) மாவட்டம் பண்ருட்டி நகரம் சார்பாக 19/9/2017 இன்று நடைபெற்ற ரோஹிங்கிய முஸ்லீம் இன படுகொலைக்கு எதிராக நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்....

அல்ஹம்துலில்லாஹ்...! 





Sunday, September 17, 2017

ரோஹிங்யா முஸ்லீம்களை இன படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்...

சகோதர!  சகோதரிகளே! உங்கள்  மீது  ஏக இறைவனின்  சாந்தியும்  சமாதானமும்  உண்டாகட்டுமாக!

அல்லாஹ் நமக்கு  விட்ட கட்டளைகளை மறந்து நாம் நிம்மதியாக காலத்தை கடக்கிறோம்.

நான் கேட்கும் கேள்வி இதுதான்

1. நீங்கள்  உங்கள்  வேலையில்  விடுமுறை  எடுப்பது வாய்ப்பு  இல்லை  ஆனால்  உங்கள் வீட்டில்   ஒருவர்  இறந்து  விட்டால் ?

அப்போது  நீங்கள்  விடுமுறை  எடுக்க மாட்டீர்களா ?

உங்கள்  குழந்தைக்கு உடல் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது  விடுமுறை  எடுக்க மாட்டீர்களா ?

ஆனால்  இதைவிட உங்கள்  கண்ணெதிரே மியான்மர்  முஸ்லிம்கள் பெண்கள்  அவர்கள்  அப்பா முன்பு அல்லது  அவர்கள்  சகோதரர்  முன்னால் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார்கள்.

இப்போது  உங்களுக்கு  இதே நிலைமை ஏற்ப்பட்டால் நீங்கள்  அமைதியாக உங்கள்  வேலையை பார்த்துக்  கொண்டு  போவீர்களா ?

2. உண்மையான  ஒரு முஸ்லிம் இது போன்ற  சம்பவங்கள் நடக்கும் போது  அவனால்  நிம்மதியாக  தூங்க  முடியாது.

3. மியான்மர்  முஸ்லிம்கள் ஆண்கள் மற்றும்  பெண்கள் தினமும்  தங்கள்  வாழ்க்கையை  ஆபத்தாகவே  கழிக்கிறார்கள்!

உங்கள்  கண்களில்  கண்ணீர்  வரவில்லையா ?

தயவுசெய்து  நீங்கள்  இறப்பதற்க்கு முன்பு அல்லாஹ்வுக்கு  அஞ்சி  நடந்து கொள்ளுங்கள்.

குறைந்த  அளவுக்கு,அல்லாஹ்விடம் கையேந்தி  அழுது  மியான்மர்  முஸ்லிம்களுக்காக துஆ செய்யுங்கள்.

அப்பாவி ரோஹிங்யா முஸ்லீம்களை  இன படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து...
Image may contain: 3 people, people smiling


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

பண்ருட்டி கிளை சார்பாக

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ்...

நாள் : 19.09.2017  செவ்வாய்க்கிழமை அன்று

நேரம் : மாலை 4 : 00
மணியளவில்

இடம் : பேருந்து நிலையம் பின்புறம் பண்ருட்டி

கண்டன உரை : குல்ஜார்

அநீதிக்கு எதிராக...

அணி திரண்டு வரும்படி...

அனைவரையும் குடும்பத்துடன் ஆர்ப்பரிக்க அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நெய்வேலி கிளை

கடலூர் வடக்கு மாவட்டம்

-JAFARDEEN

தொழுகை சட்டங்கள் PDF


Saturday, September 2, 2017

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை 2017



அஸலாமு  அலைக்கும் ரஹமதுல்லாஹி வ பரக்காத்தஹு ,

கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி கிளை சார்பாக , நபிவழியில்  ஹஜ் பெருநாள் தொழுகை  நல்லமுறையில் நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ் !!!!